ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சிறார் திருமணத்தின் காரணமாக, 14 வயது சிறுமி கர்பமானாள். அவளை கர்ப்பமாக்கிய அவளது கணவனான 17 வயது சிறுவன், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். ஊத்துக்கோட்டை அருகே கெருகம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் 17 வயது சிறுவனுக்கும், இவரது மாமன் மகளான கச்சூர் கிராமத்தில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.