வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்: உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் இறையூர் மக்கள் முற்றுகை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இறையூர் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டியலின மக்கள் வசிக்கும் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி மனித கழிவு கலக்கப்பட்டது .

இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி இறையூர் கிராமத்தை சேர்ந்த மாற்று சமூக சிறுவர்கள் 3 பேரின் புகைப்படம் வெளியானது. இதனை கண்டித்து இறையூர் கிராம மக்கள் ஆட்சியர் அலுவகத்தில் முற்றுகையில் ஈடுபட்டனர். தங்களுக்கு எதிராக வழக்கை திசை திரும்புவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எப்.ஐ.ஆர்.கூட வழங்கவில்லை என்று இறையூரில் வசிக்கும் மாற்று சமூக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்கள் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

Related Stories: