டெல்லி : விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வசூலிக்கப்படும் வரிகள் மற்றும் இதர சேவை கட்டணங்கள் அனைத்தும் பயணத்தை ரத்து செய்யும் பயணிகளுக்கு முழுமையாக திருப்பி தர ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. விமான டிக்கேட் முன்பதிவு செய்யும் போது, வரிகள், பயனாளர் வசதி கட்டணம், விமான நிலைய வளர்ச்சி கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களையும் சேர்த்தே வசூலிக்கிறது. ஆனால் பயணத்தை ரத்து செய்யும் போது இந்த தொகையை விமான நிறுவனங்கள் திருப்பி அளிப்பதில்லை என்பது குற்றச் சாட்டாகும்.