புதுடெல்லி: டெல்லி கலால் கொள்கை விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் மகள் கவிதாவின் முன்னாள் ஆடிட்டருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி மதுபானக்கொள்கை விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்துள்ளது. மீண்டும் அவரிடம் 16ம் தேதி விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது.