வாஷிங்டன்: சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டுள்ளதால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிலிக்கான் வேலி வங்கி இழுத்து மூடப்படுவதாக கடந்த வெள்ளியன்று அறிவிக்கப்பட்டது. இந்த வங்கியின் மொத்த நிர்வாகத்தையும் அமெரிக்காவின் பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவின் 16வது பெரிய வங்கியான சிலிக்கான் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.17.13 லட்சம் கோடி. வங்கியின் டெபாசிட் தொகை ரூ.14.37 லட்சம் கோடி ஆகும். இந்நிலையில்,இந்திய வம்சாவளியை சேர்ந்த சிலிக்கான் வேலி வென்சர் முதலீட்டாளரான அசு கர்க் கூறுகையில்,‘‘ சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டுள்ளதால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். அமெரிக்காவில் தொழில் செய்யும் பெரும்பாலான இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த வங்கியை தான் பயன்படுத்துகின்றன.