ஐதராபாத்: ஆந்திரா முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்கிரசில் இருந்து நேற்று விலகினார். அவர் விரைவில் பாஜவில் இணைகிறார்.ஆந்திராவில் கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்தவர் கிரண்குமார் ரெட்டி. இவர், தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும், தொடர்ந்து காங்கிரசில் மூத்த தலைவராக இருந்து வந்தார்.