திட்டக்குடி: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் நேற்று நடந்த கொடியேற்று விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் திமுக அரசு, கலைஞர் காலத்திலிருந்தே விவசாயிகளுக்கு ஆதரவாகவே உள்ளது. 1996ல் முதல்வராக கலைஞர் இருந்தபோது, ஆலோசனைக்குழு அமைத்து ஒன்றிய அரசுடன் பேசி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் நஷ்டஈடாக பெற்றுக் கொடுத்தார்.