மும்பை: லண்டன் - மும்பை விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி சிகரெட் புகைத்ததால், அவரை போலீசார் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். இங்கிலாந்தில் இருந்து புறப்பட்ட லண்டன் - மும்பை ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்க குடியுரிமை பெற்ற ரமாகாந்த் (37) என்ற பயணி பயணம் செய்தார். அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று விமானத்தின் கழிவறை கதவை திறக்க முயன்றதாகவும், பின்னர் தனது சட்டை பையில் இருந்து சிகரெட்டை எடுத்துக் கொண்டு கழிப்பிடத்திற்குள் சென்றார்.