லண்டன் - மும்பை விமானத்தில் ‘தம்’ அடித்த அமெரிக்க பயணி கைது

மும்பை: லண்டன் - மும்பை விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி சிகரெட் புகைத்ததால், அவரை போலீசார் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். இங்கிலாந்தில் இருந்து புறப்பட்ட லண்டன் - மும்பை ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்க குடியுரிமை பெற்ற ரமாகாந்த் (37) என்ற பயணி பயணம் செய்தார். அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று விமானத்தின் கழிவறை கதவை திறக்க முயன்றதாகவும், பின்னர் தனது சட்டை பையில் இருந்து சிகரெட்டை எடுத்துக் கொண்டு கழிப்பிடத்திற்குள் சென்றார்.

அதை கவனித்த சக பயணிகள், விமான ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் கழிப்பறைக்குள் இருந்த ரமாகாந்தை வெளியேற்றி, புகைப்பிடித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியதால், விமானம் மும்பை வந்திறங்கியதும் அவரை போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட ரமாகாந்த் குடிபோதையில் இருந்தாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதை உறுதிப்படுத்த, அவரது மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: