மதுரை: ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியருக்கு (ஆர்டிஓ) ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெரும்பூரைச் சேர்ந்த நித்யா, தனது மகன், மகளுக்கு காட்டுநாயக்கன் ஜாதி சான்றிதழ் கோரிய மனுவை நிராகரித்த ஆர்டிஓ உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், குழந்தைகளின் தந்தை காட்டு நாயக்கன் ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளார்.