சென்னை: சென்னை அண்ணா சாலை, வெங்கடேசன் 2வது தெருவில் உள்ள பான் மசாலா கடையில், வாடிக்கையாளர்களுக்கு ரகசியமாக கஞ்சா சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பான் மசாலா என்ற பெயரில் கஞ்சா சாக்லெட்கள் மற்றும் பான் கஞ்சா உருண்டைகள் ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.