கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இலங்கையிலுள்ள 340 உள்ளாட்சிகளுக்கும் இந்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என வௌியான செய்திகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மறுப்பு தெரிவித்திருந்தார். நிதிநெருக்கடியால் உள்ளாட்சி தேர்தலை நடத்த போதுமான நிதியை அரசு ஒதுக்காததால், மார்ச் 9ம் தேதி தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணையக்குழு கூறியிருந்தது.