கோஹிமா: நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் இன்று புதிய அரசின் பதவியேற்பு விழாக்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மேகாலயா, நாகாலாந்து, திரிபுராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 26 ெதாகுதிகளை ஆளும் தேசிய மக்கள் கட்சி கைப்பற்றியது. பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் முதல்வர் கான்ராட் சங்மாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால், பாஜகவின் இரண்டு எம்எம்ஏக்கள் உள்பட 45 எம்எல்ஏக்களின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளது. அதையடுத்து கான்ராட் சங்மா இன்று இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன் சேர்த்து 12 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.