திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு திருச்சூரில் உள்ள வீட்டில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றார். அப்போது ஒரு கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக நடிகையின் முன்னாள் டிரைவரான பல்சர் சுனில் என்ற சுனில்குமார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் உள்பட அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதில் முக்கிய நபராக கருதப்படும் பல்சர் சுனிலுக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.