காபூல்: ஆப்கன் அரசு பெண்களின் உரிமைகளை ஒடுக்கும் வகையில் பல்வேறு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டுமொத்தமாகத் தாலிபான் அமைப்பினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் கைகளில் ஆப்கன் வந்தது. ஆட்சியை கைப்பற்றியது முதலே ஆப்கானிஸ்தானில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள், அடக்குமுறைகளை தாலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர்.முக்கியமாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் துணையின்றி பொது இடங்களுக்கு செல்ல தடை, விமானத்தில் பயணிக்க தடை, ஆடை கட்டுப்பாடு என பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.