கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து 40 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்தனர். தென்னாப்பிரிக்காவின் குவாசுலு நதால் மாகாணத்திற்குட்பட்ட உம்லாங்கா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. அப்போது அங்கு அதிவேகமாக தாறுமாறாக வந்த டெய்லர் லாரி கட்டுப்பாட்டை இழந்து வரிசையில் நின்று இருந்த வாகனங்கள் மீது மோதியது.