லண்டன்: ‘பாஜ சித்தாந்தத்தின் மையமே கோழைத்தனம்தான்’ என லண்டனில் ராகுல் விமர்சித்துள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் நேற்று இந்திய வம்சாவளிகள் மத்தியில் பேசினார். வெளிநாடு வாழ் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: வெறுப்பு மற்றும் வன்முறை தான் பாஜவின் சித்தாந்தம். அதனால்தான் மக்களை தாக்கக் கூடிய அவமரியாதையான சித்தாந்தத்தை கொண்டுள்ளனர். இது பாஜவுக்கும், ஆர்எஸ்எஸ்சுக்கும் இயற்கையாகவே அமைந்த ஒன்று.