லண்டனில் ராகுல் தாக்கு கோழைத்தனமே பாஜ சித்தாந்தம்

லண்டன்: ‘பாஜ சித்தாந்தத்தின் மையமே கோழைத்தனம்தான்’ என லண்டனில் ராகுல் விமர்சித்துள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  லண்டனில் நேற்று  இந்திய வம்சாவளிகள் மத்தியில் பேசினார். வெளிநாடு வாழ் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: வெறுப்பு மற்றும் வன்முறை தான் பாஜவின் சித்தாந்தம். அதனால்தான் மக்களை தாக்கக் கூடிய அவமரியாதையான சித்தாந்தத்தை கொண்டுள்ளனர். இது பாஜவுக்கும், ஆர்எஸ்எஸ்சுக்கும் இயற்கையாகவே அமைந்த ஒன்று.

சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் அளித்த பேட்டியை கவனித்தீர்களா? சீனா நம்மை விட சக்தி வாய்ந்தது என்பதால், அவர்களுடன் நாம் எப்படி சண்டை போட முடியும்? என கேட்கிறார். இதுதான் அவர்களின் கோழைத்தனமான சித்தாந்தம். சாவர்க்கர் தனது புத்தகத்தில், ஒருமுறை அவரும் அவரது நண்பர்களும் ஒரு முஸ்லிம் நபரை அடித்ததாகவும், அன்று மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் எழுதியுள்ளார். 5 பேர் சேர்ந்து ஒரு மனிதனை அடித்தால், அது அவர்களை மகிழ்விக்கிறது என்றால், அது கோழைத்தனம் மட்டுமே. இவ்வாறு ராகுல் பேசினார். 

Related Stories: