காஞ்சி டிஎஸ்பிக்கு பிடிவாரன்ட்

காஞ்சிபுரம்: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத, காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து பரமத்தி நீதிமன்றம் உத்தரவிட்டது. காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார். இவர், கடந்த 2017-18ல், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது, நடந்த கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை, பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், வழக்கு விசாரணையின் போது, டிஎஸ்பி சுரேஷ்குமார் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும், நீதிமன்றத்தில் ஆஜராகாத டிஎஸ்பி சுரேஷ்குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, சார்பு நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார். டிஎஸ்பிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: