கொல்கத்தா: கொல்கத்தாவில் பேனா வாங்க சென்ற சிறுமியை 75 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்ததால், அவரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அடுத்த தாகூர்புகூரை சேர்ந்த பூபேந்திர நாத் ஹவ்லதார் (75) என்பவர், தனது வீட்டில் எழுதுபொருள்கள் விற்கும் கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் பள்ளிச் சிறுமிகள் எழுதுபொருட்களை வாங்கிச் செல்வர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முதியவரின் கடையில் பேனா வாங்கச் சென்ற 14 வயது சிறுமியை, முதியவர் வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.