குன்றத்தூர் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்

சென்னை: சென்னை குன்றத்தூர் அருகே திடீரென பிடித்த தீயால் 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து  நாசமாகின. தீ விபத்தில் ஒரு வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

குன்றத்தூர் அருகே சிப்காட் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் கூலித்தொழிலாளர்கள் வீட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஏறக்குறைய 25 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. மின்கசிவு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் ராஜாங்கம் என்பவர் வீட்டில் ஏற்பட்ட தீ அருகே உள்ள மற்ற குடிசைகளுக்கு மளமளவென பரவியுள்ளது.

இந்த தீ விபத்தில் அவர் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மேலும் தீ வேகமாக பரவியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் தொழிலாளர்களின் குடிசையில் இருந்த பொருட்கள், உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதையடுத்து ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை ஆகியோர் வந்து கூலித்தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Related Stories: