ஷில்லாங்: மேகாலயாவில் பாஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த எச்எஸ்பிடிபி எம்எல்ஏவின் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேகாலயாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அங்கு போட்டியிட்ட பிராந்திய கட்சியான எச்எஸ்பிடிபி கட்சியானது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில் எச்எஸ்பிடிபியை சேர்ந்த எம்எல்ஏக்களான மிதோடியஸ் தாகார், ஷக்லியார் வார்ஜ்ரி ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென என்பிபி- பாஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தனர். இதனால் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர்.