ஸ்புட்னிக் தடுப்பூசி உருவாக்கிய ரஷ்ய விஞ்ஞானி மர்ம கொலை

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி உருவாக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான ஆன்ட்ரே போடிகோவ் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார். ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர் ஆன்ட்ரே போடிகோவ். இவர் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தயாரித்த 18 விஞ்ஞானிகளில் ஒருவராவார்.

இந்நிலையில் மாஸ்கோவில் உள்ள தனது குடியிருப்பில் வியாழனன்று இறந்து கிடந்தார். அவர் கழுத்தை பெல்ட்டால் நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related Stories: