வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மார்பு பகுதியில் இருந்த தோல் புற்றுநோய் திசுக்கள் முழுமையாக அகற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது பரிசோதனை முடிய நீண்ட நேரமானது. இந்நிலையில் அதிபரின் மருத்துவரான கெவின் ஓ கான்னர் கூறுகையில், ‘‘கடந்த மாதம் 16ம் தேதி அதிபரின் வழக்கமான மருத்துவ பரிசோதனையின்போது அவரது மார்பில் இருந்த புற்றுநோய் திசுக்களால் ஏற்பட்ட புண் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இது மெதுவாக வளரும் புற்றுநோயாகும்.