பொன்னேரி: பொன்னேரியில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று ஒரு வாலிபர் நகை வாங்குவது போல் நடித்து, கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 3 சவரன் நகைகளை திருடி சென்றுவிட்டார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஹரிஹரன் பஜார் பகுதியில் நீண்ட காலமாக நகைக்கடை நடத்தி வருபவர் ராகவன். இந்நிலையில், நேற்ற மாலை ஒரு வாலிபர் மற்றும் சிலர் நகை வாங்குவது போல் கடைக்குள் நுழைந்தனர். பின்னர், அங்கு விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து நகைகளையும் போட்டு அழகுபார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்த நகைகளில் சிலவற்றை அந்த வாலிபர் செல்போனில் படம்பிடித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.