சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் பாஜக மகளிர் அணி நிர்வாகி தேவி வீட்டுக்குள் மது போதையில் நுழைந்த காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வடசென்னை கிழக்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளராக இருப்பவர் தேவி. அவருடைய வீட்டுக்குள் மது போதையில் காவலர்கள் 2 பேர் நுழைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரவு பணியில் இருந்த காவலர் பாலாஜி, காவலர் பரித் ராஜா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.