திருமலை: தெலங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் பேட்மின்டன் விளையாடியவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதற்கான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மல்காஜ்கிரியை சேர்ந்தவர் ஷியாம்யாதவ்(38). தனியார் நிறுவன ஊழியர். ஷியாம் எப்போதும் தனது அலுவலக பணியை முடித்துக் கொண்டு தினந்தோறும் பேட்மின்டன் விளையாடுவது வழக்கம்.