வாஷிங்டன்: அமெரிக்க ஏற்றுமதி கவுன்சிலின் உறுப்பினர்களாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேரை அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார்.
சர்வதேச வர்த்தகம் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை அளிப்பதில் அமெரிக்க ஏற்றுமதி கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கவுன்சில் உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு 20க்கும் மேற்பட்டோரை அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த புனித் ரெஞ்சன் மற்றும் ராஜேஷ் சுப்பிரமணியன் ஆகியோர் ஏற்றுமதி கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.