மெக்சிகோ: மெக்சிகோ நாட்டின் எக்காடெபிக் என்ற இடத்தில் பிளாஸ்டிக் ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எக்காடெபிக் என்ற இடத்தில் உள்ள பெரிய பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். கன நேரத்தில் ஆலை முழுவதும் பரவிய தீ அங்கு வைக்கப்பட்டிருந்த பல டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கபளீகரம் செய்தது.