இத்தாலி கடலில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட 59 அகதிகள் பலி

ரோம்: இத்தாலி கடலில் சென்ற படகு மூழ்கிய விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 59 அகதிகள் பலியானதாக கடலோர காவல் படையினர் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மக்களை துருக்கியில் இருந்து ஏற்றிச் சென்ற மரக் கப்பல் ஒன்று ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றது. நேற்று அதிகாலை தெற்கு இத்தாலியின் கலாப்ரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஸ்டெக்காடோ டி குட்ரோ என்ற கடலோர ரிசார்ட்டிற்கு அருகே அந்த படகு சென்ற போது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக பாறைகளின் மீது படகு மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் பயணம் செய்த நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கினர். அவர்களில் 12 குழந்தைகள் உட்பட 59 பேர் பலியானதாக இத்தாலி கடலோர காவல் படையினர் தெரிவித்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இவர்களை பற்றிய எந்த தகவலும்  தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.

Related Stories: