3ம் கட்ட தி ஓஷன் பாய்மர பந்தயம் தொடக்கம்: 12,750 நாட்டிகள் மைல் பயணத்தை தொடங்கிய வீரர்கள்

தென்னாப்பிரிக்கா: உலக புகழ்பெற்ற தி ஓஷன் பாய்மர படகு பந்தயத்தின் 3ம் கட்ட பயணம் தென்னாபிரிக்காவில் இருந்து தொடங்கியது. 14 வது ஆண்டாக தி ஓஷன் ரேஸ் எனப்படும் பாய்மர படகு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த போட்டி ஸ்பெயின் நாட்டிலிருந்து தொடங்கியுள்ளது. அலிகாண்டேவிலிருந்து கபோ வெர்டே வரை 1,900 நாட்டிகல் மைல் தூரத்திலிருந்து கேப்டவுனுக்கு முதல் இரண்டு கட்ட போட்டிகள் நடந்தன. இரண்டிலும் ஒல்சிம் பிஆர்பி அணி வென்றது. அடுத்தகட்ட போட்டிகள் கேப்டவுனிலிருந்து தொடங்கின.

பிரேசில் நாட்டின் இதஜாய் வரை 12,750 நாட்டிகள் மைல் தூரத்திற்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது. பந்தயம் வடக்கு நோக்கி, மந்தமான பகுதிகள் வழியாக, பூமத்திய ரேகை முழுவதும் மற்றும் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள நியூபோர்ட், ரோட் தீவு வரை, தெற்குப் பகுதியைத் தொடர்ந்து, பிரேசிலில் உள்ள இட்டாஜாயில் மற்றொரு நீட்டிக்கப்பட்ட, இழுத்துச் செல்லும் நிறுத்தம் இருக்கும். அங்கிருந்து, பந்தயம் ஐரோப்பாவிற்குத் திரும்புகிறது, அட்லாண்டிக் கடல் கடந்து டென்மார்க்கின் ஆர்ஹஸ் நகருக்குச் செல்கிறது, அதைத் தொடர்ந்து ஜெர்மனியின் கீல் ஒரு ஃப்ளை-பை மூலம் நெதர்லாந்தின் ஹேக்கில் நிறுத்தப்படும். ஜூலை மாதத்தில் இத்தாலி நாட்டின் ஜெனோவில் இந்த போட்டி நிறைவு பெறவுள்ளது.  5 வார பயணத்தை இந்த வீரர்கள் உற்சாகமாக தொடங்கியுள்ளனர்.

Related Stories: