கொழும்பு: இலங்கையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் எதிர்கட்சியினரை போலீசார் விரட்டி அடித்ததால் பதற்றம் நிலவியது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கவும், தேர்தல் செலவீனங்களுக்கும் நிதி ஒதுக்க நிதி அமைச்சகம் மறுத்ததால் தேர்தல் நடப்பது கேள்விகுறியாகியுள்ளது. இதனை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.