பாரிஸ்:உலகளாவிய நிதிக் குற்ற கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) பாரிஸில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது சர்வதேச நிதி பரிமாற்றங்களை கண்காணிக்கும். மேலும் உலகளாவிய சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடும் அரசுகளுடன் இணைந்து செயல்படும் அமைப்பாகும். இந்த அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட 39 நாடுகளும், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இடம் பெற்றுள்ளன. உக்ரைன் இந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை.