மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம், விவசாயி. இவர் செம்மறி ஆடுகளையும் வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்று வந்த செம்மறி ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை பார்த்தபோது பட்டியில் புகுந்து மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் இறந்து போனது தெரிந்தது. மேலும் அங்கிருந்த சில ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.