கனடா நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுக்க உள்ளதாக நடிகர் அக்ஷய் குமார் அறிவிப்பு

மும்பை: கனடா நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுக்க உள்ளதாக நடிகர் அக்ஷய் குமார் அறிவித்துள்ளார். இந்திய பாஸ்போர்ட் பெற அக்ஷய் குமார் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் சில வருடங்களுக்கு முன்பு கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றார்.  கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அக்ஷய் குமார் வாக்களிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் அவர் கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றிருப்பதுதான் என அப்போது கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது தனியார் ஊடகத்திற்கு அக்ஷய் குமார் அளித்த பேட்டியில், கனடா நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்;

“இந்தியாதான் எனக்கு எல்லாம், நான் வாழ்க்கையில் பெற்ற எல்லாமே இந்தியா எனக்கு கொடுத்ததுதான்” என நேர்காணலில் அக்ஷய் கூறியுள்ளார். மேலும் அவர் இந்திய பாஸ்போர்ட் பெற அக்ஷய் குமார் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: