சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே மெத்தம்பெட்டமையின் என்ற போதைப்பொருள் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே, இரவு நேரங்களில் அதிகளவில் மெத்தம்பெட்டமையின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே ரகசியமாக கண்காணித்தபோது, வாலிபர் ஒருவர் மெத்தம்பெட்டமையின் என்ற போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
