மணலியில் கழுத்தை நெரித்து திருநங்கை கொலை

திருவொற்றியூர்: மணலியில் கழுத்தை நெரித்து திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணலி, எம்.ஜி.ஆர். நகர் அருகே சாலையோரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக பால்பண்ணை போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சுடிதார் அணிந்த நிலையில் ஒரு திருநங்கை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த திருநங்கை சரவணன் என்ற சனா (27) என தெரிய வந்தது. இவரை கழுத்தை ெநரித்து கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: