ஜடேஜா சிறப்பாக திரும்பி வந்துள்ளார்: முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பேட்டி

லக்னோ: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டி: ரவீந்திர ஜடேஜா பேட் மற்றும் பந்துவீச்சில் தற்பொழுது மிகவும் சிறப்பாக இருக்கிறார். அவர் ஐபிஎல்லில் டோனிக்கு மிகவும் உதவியாக இருப்பார். அவர் மிகவும் வலுவுடனும் உடல் தகுதியுடனும் இருப்பதால் மிகச் சிறந்த மறுவாழ்வை பெற்றுள்ளார்.

அவர் சேப்பாக்கம் செல்லும்போது டோனி போலவே அவருக்கும் ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள். ருதுராஜ் முதல்முறையாக சேப்பாக்கத்தில் விளையாட இருக்கிறார். நிச்சயமாக அவர் சிறப்பாக செயல்படுவார். டோனியும் சேப்பாக்கம் சென்று ரசிகர்களைச் சந்திக்க மிகவும் ஆவலாக இருப்பார், என தெரிவித்துள்ளார்.

Related Stories: