தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை பகுதியில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த 750 போதை மாத்திரை், 500 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர். வடசென்னை வண்ணாரப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட கிழக்கு கல்லறை சாலையில், உடல் வலிக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை போதைப்பொருளாக சிலர் விற்பனை செய்வதாக வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், போலீசார் அவர்களை சோதனை செய்ததில், சுமார் 750 வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது.