அரியானாவில் பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்த தந்தை, சகோதரன்: போக்சோ வழக்கு பதிந்து விசாரணை..!

குர்கிராம்: அரியானாவில் பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் சகோதரன் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அரியானா மாநிலம் கெர்கி தவுலா பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, அதே பகுதியில் செயல்படும் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி, தனது பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் அளித்த புகாரில், ‘எனது தந்தை, சகோதரர் ஆகிய இருவரும் எனக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். அவர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டுகின்றனர்’ என்றார். அதிர்ச்சியடைந்த பள்ளி முதல்வர், இவ்விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் தொடர்ந்து நான்கு மணி நேரமாக விசாரணை நடத்தினர். அதன்பின் தந்தை, மகன் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதியப்பட்டுள்ளது. அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். புகாரின் உண்மை தன்மை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: