இளவம்பேடு கண்டெய்னர் நிறுவனத்தில் அலுமினியம் திருட்டு: 2 பேர் கைது

பொன்னேரி: பொன்னேரி அடுத்த இளவம்பேடு பகுதியில் உள்ள கண்டெய்னர் கம்பெனியில் 50 கிலோ  அலுமினியம் திருடிய 2 பேரை பொன்னேரி போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த இளவம்பேடு பகுதியில் சிஎப்எஸ் கண்டெய்னர் நிறுவனம் உள்ளது.

இதில் நேற்று முன்தினம் அலுமினியம் பகுதியில் வேலை செய்த வேண்பாக்கம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த அப்பன்ராஜ் (33), வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (28) ஆகிய 2 பேரும் சுமார் 50 கிலோ அலுமினியம் பொருட்களை திருடியதாக செக்யூரிட்டி ஆபீஸர் சங்கர் (50) பொன்னேரி போலீசில் புகார் செய்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: