நிதிஷ் கட்சியின் மூத்த தலைவர் உபேந்திரா திடீர் விலகல்

பாட்னா: நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் உபேந்திர குஷ்வாஹா கட்சியில் இருந்து விலகினார். பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவராக இருந்தவர் உபேந்திர குஷ்வாஹா. முன்னாள் ஒன்றிய அமைச்சரான இவர் தற்போது எம்எல்சியாக உள்ளார். இந்நிலையில், துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு நிதிஷ்குமார் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது உபேந்திராவுக்கு பிடிக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த உபேந்திரா ஐக்கிய ஜனதா தளத்துக்கு முழுக்கு போடுவதாக நேற்று தெரிவித்தார். ராஷ்டிரிய லோக் ஜனதா தள் என்ற புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

Related Stories: