பிரேசில்: பிரேசில் நாட்டில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்த விபத்துகளில் இதுவரை 36 பேர் உயிரிழந்தனர். பிரேசிலின் தென்கிழக்கு கடற்கரை நகரமான ஹிலபெலாவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ள நிலையில், கடற்கரை பகுதியில் உள்ள சாலைகள் இடிந்து விழுந்தும், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தலைகீழாக கவிழ்ந்து இருக்கும் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது. வெள்ளம் காரணமாக நகரின் பல இடங்களில் குடிநீர் மற்றும் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.