குன்னூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த மகா சிவராத்திரி விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர், கோவை சுற்றுலா மாளிகையில் தங்கினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மற்றும் உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவு தூணில் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் புறப்பட இருந்தார்.