ரூ.2 கோடி ஹவாலா பணத்தை மறைக்க முயன்ற 4 ரயில்வே போலீஸ் சஸ்பெண்ட்

சென்னை: கடந்த 14ம் தேதி பயணி ஒருவர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை பெரம்பூருக்கு வந்தார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்தனர். சோதனையில் ரூ.2 கோடி கைப்பற்றப்பட்டது. மேலும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது.உரிய ஆவணங்கள் இல்லாமலும் அந்த பயணி ஹவாலா பணத்தை தன்னுடன் எடுத்து சென்றதை உளவுபிரிவு அதிகாரி கண்டுபிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன்,சப் இன்ஸ்பெக்டர் குமார், காவலர்கள் தினேஷ்,சுதாகர் ஆகியோர் பறிமுதக் செய்யப்பட்டதை மறைக்க பயணியிடம் பேரம் பேசியதாகவும்,இது குறித்து உயர் அதிகாரி தகவல் அளிக்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் உட்பட 4 பேரையும் டிஐஜி விஜயகுமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: