அர்கபுட்லா: அமெரிக்காவில் முன்னாள் மனைவி, வளர்ப்பு தந்தை உட்பட 6 பேரை அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டேட் கவுன்டியில் உள்ள அர்கபுட்லாவில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி 52 வயதான ரிச்சர்ட் டேல் குரும் என்பவர் தனிநபராக இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளார். இவர் தனது முன்னாள் மனைவியை சுட்டுக் கொன்றுள்ளார். அடுத்ததாக, வளர்ப்பு தந்தை மற்றும் அவரது சகோதரியையும் அவர்களது வீட்டிற்குள் சென்று சுட்டுக் கொன்றுள்ளார்.