புதுடெல்லி: உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தாய் மொழிகளில் பயிற்றுவிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என மாநில ஆளுனர்கள், முதல்வர்களுக்கு யுஜிசி தலைவர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பல்கலைகழக மானிய குழு(யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் அனைத்து மாநிலங்களின் ஆளுனர்கள், முதல்வர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,தேசிய கல்வி கொள்கை 2020ன் படி இந்திய மொழிகளில் கல்வி பயிற்றுவிப்பதற்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி கல்வி பயிற்றுவிப்பது மற்றும் புத்தகங்கள் ஆகியவை தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.