அப்போது ராஜேந்திரன் திடீரென பெயிண்டிங் செய்ய பயன்படுத்தும் டர்பன்டைனை மனைவி மற்றும் மகன் மீது ஊற்றி தீ வைத்தார். இந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரனின் உடலிலும் தீ பரவியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார். இதில் படுகாயமடைந்த பிந்து, அமல் ஆகியோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வர்க்கலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குடும்பத் தகராறில் பயங்கரம்: மனைவி, மகனை தீ வைத்து எரித்த தொழிலாளி உடல் கருகி பலி appeared first on Dinakaran.