அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கஞ்சா விற்றவர் கைது: 4 கிலோ பறிமுதல்

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கஞ்சா விற்றவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அம்பத்தூரில் கஞ்சா விற்கப்படுவதாக நேற்று முன்தினம் அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அம்பத்தூர் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அம்பத்தூர் தொழிற்பேட்டை இ.பி. சாலை சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில், 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் கொருக்குப்பேட்டையை சேர்ந்த மதன்குமார் (37) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: