கருங்கல்: கருங்கலில் இருந்து பூக்கடை வழியாக தக்கலை செல்லும் சாலை உள்ளது.வட்டவிளையில் இந்த சாலையில் குறுக்காக கீழ்ப்பகுதியில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த நிலையில் கடந்த 2021 டிசம்பரில் இரட்டை ரயில் பாதை பணிக்காக சாலை மேம்பாலம் துண்டிக்கப்பட்டது. பின்னர் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது. இதையடுத்து பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இரட்டை ரயில் பாதை பணிகள் வேகமெடுத்துள்ளன.