டெல்லி: பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை சேத்தன் சர்மா அனுப்பினார். தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இந்திய வீரர்கள் பற்றி சேத்தன் சர்மா சர்ச்சையாக பேசியிருந்தார். கங்குலி, கோலி உள்ளிட்டோர் குறித்து சேத்தன் சர்மா சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் உடல் தகுதியை நிரூபிக்க ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சேத்தன் சர்மா கூறியிருந்தார். ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் என் வீட்டிற்கு வந்து வெகு நேரம் பேசிவிட்டு செல்வார்கள். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசுவோம். ஆனால், அவை என் வீட்டை விட்டு வெளியே வராது என்றும் சேத்தம் சர்மா தெரிவித்திருந்தார்.