மும்பை: வரும் ஆண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கூடுதலாக 6,500 விமானிகள் தேவைப்படுவர் என பயணிகள் விமான நிறுவனத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கடன் பிரச்னையால் நஷ்டத்தால் இயங்கி வந்த நிலையில் அதனை டாடா குழுமம் அக்டோபர் 2021ம் ஆண்டு வாங்கியது. இதனிடையே, பிரான்சின் விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களையும், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க அண்மையில் ஏர் இந்தியா ஒப்பந்தம் செய்தது. சில மாதங்களுக்கு முன் 370 விமானங்கள் வாங்குவதற்கு ஏர் இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது.